- ஆவுடையார்கோயில்
- அரந்தாங்கி
- சட்டமன்ற உறுப்பினர்
- ராமச்சந்திரன்
- அரசு மேல்நிலைப்பள்ளி
- ஆவுடையார்கோ
- தமிழ்நாடு அரசு
- கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி
- ஆடுயார்கோயில்
அறந்தாங்கி, மார்ச் 11: அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ ராமசந்திரன் வழங்கினார்.
ஆவுடையார்கோவில் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் பயிலும் 231 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன் வழங்கினார்.மேலும் கலைத்திருவிழாவில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவன் ஜெயராமிற்கும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் மாவட்ட முதலிடம் பிடித்த மாணவி தீபிகாவிற்கும் வாழ்த்து கூறி பாராட்டினார்.நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு தலைவி உமாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர். ஆசிரியர் குமார் வரவேற்றார், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.எம்எல்ஏ வழங்கினார்
The post ஆவுடையார்கோவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் appeared first on Dinakaran.